10 கதை வந்தால் அதில் 5 சூரிக்காக எழுதப்படுகிறது: இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தான் ஆரம்பித்துள்ள தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது என்னிடம் 10 இயக்குனர்கள் கதை சொல்ல வந்தபோது, அதில் ஐந்து இயக்குனர்கள் சூரிக்காகவே கதை சொல்ல வந்தார்கள் என்றும், லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகர் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ’மாமன்’ என்ற படம் மே 16ஆம் தேதி வெளியாகும் நிலையில், இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பொன்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் பேசிய போது, ’மாமன்’ படத்தின் டிரைலரை பார்க்கும் போதே வெற்றி பெறும் என என்னால் சொல்ல முடியும். மக்கள் சமீப காலமாக குடும்ப கதைகளுக்கு நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
அந்த வகையில் ’மாமன்’ திரைப்படம் நிச்சயம் தெரிய வெற்றியைப் பெறும். சூரி அண்ணனின் வளர்ச்சியை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இவருடைய வளர்ச்சி அனைவருக்கும் சந்தோஷத்தை அளிக்கிறது.
நான் சின்ன பட்ஜெட்டில் சில படங்களை தயாரிக்கத் தொடங்கி இருக்கிறேன். அதில் பத்து கதைகள் வந்தால், ஐந்து கதைகளில் சூரி ஹீரோ என்று சொல்கிறார்கள். அதை பார்க்கும் போது உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments