லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா? பரபரப்பு தகவல்

மாநகரம், கைதி ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படம் வெளியானால் லோகேஷ் கனகராஜ் முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கமலஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள பிரமாண்டமான படத்தை லோகேஷ் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த படம் குறித்து அதன்பின்னர் எந்த செய்தியும் வெளிவரவில்லை. அதேபோல் தெலுங்கு திரைப்படம் ஒன்றையும் இயக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாகவும் முன்னணி தெலுங்கு நடிகர் அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சூர்யா அல்லது கார்த்தி நாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே கார்த்தி நடித்த ‘கைதி’ என்ற சூப்பர்ஹிட் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்ற நிலையில் சூர்யா படத்தை அவர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் லோகேஷ் இயக்குனர் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதை அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் வரை பொறுமை காப்போம்

More News

ரஜினி இல்லாமலேயே ஆரம்பமாகும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு?  பரபரப்பு தகவல் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'.

பிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: கடிதத்தில் கூறப்பட்ட அதிர்ச்சி காரணம்

மனச்சோர்வு உள்பட பல்வேறு காரணங்களால் நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

பெய்ரூட் வெடிவிபத்து: போட்டோவுக்கு போஸ் கொடுத்த மணமகள் பதறி ஓடிய வீடியோ வைரல்

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் சமீபத்தில் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

ஆகஸ்ட் 10 முதல் ஜிம்கள் திறக்க முதல்வர் உத்தரவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையிடம் 1000 ரூபாய் கடன் கேட்ட ரசிகர்

வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு ரசிகர் ஒருவர் அதிர்ச்சி தந்துள்ளார்