மாளவிகா மோகனனுக்கு 'மாஸ்டர்' இயக்குனரின் சிறப்பு பரிசு

கடந்த சில ஆண்டுகளாகவே மாஸ் நடிகர்களுக்கு பிறந்தநாள் வரும் போதெல்லாம் காமன் டிபி போஸ்டர் வெளியிடும் வழக்கம் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்பட பல நடிகர்களின் பிறந்தநாளின்போது காமன் டிபி போஸ்டர்களை திரையுலக பிரபலங்கள் வெளியிட்டனர். இந்த காமன் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாஸ் நடிகர்களை அடுத்து தற்போது நடிகைகளுக்கும் காமன் டிபி போஸ்டர்கள் வெளியாக தொடங்கிவிட்டது. இதனை அடுத்து ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் பிறந்தநாள் காமன் டிபி போஸ்டரை ’மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த போஸ்டர் மாளவிகாவின் பிறந்த நாள் சிறப்பு பரிசாக கருதப்படுகிறது.

மாளவிகாவுக்கு மிகவும் பிடித்த பிங்க் நிறத்தில் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்ட இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தை அடுத்து தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன், படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார் என்பதும், இந்த படத்திற்கு பின் அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


 

More News

உலகிலேயே ரொம்ப காஸ்ட்லி காரை சொந்தமாக்கி இருக்கும் ரெனால்டோ!!!

கால்பந்து உலகின் ஜாம்பவனான கிறிஸ்டியானோ ரோனால்டோ கார்களின் மீது அதிக விருப்பம் கொண்டவர்.

எகிப்து பிரமிடுகளைக் கட்டியது வேற்றுகிரகவாசிகளா??? புது சர்ச்சையை கிளப்பியிருக்கும் எலான் மஸ்க்!!!

விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி எலான் மஸ்க்

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி ஆரம்பம்: விரைவில் ரிலீஸ்

இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சினம்'.இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்பே முடிந்துவிட்

மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது, ஆனால்... கமல்ஹாசன் டுவீட்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை என்ற அம்சத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது என்பது தெரிந்ததே.

கொரோனாவால் உயிரிழந்த நர்ஸ் உடலை புதைக்க எதிர்ப்பு: 2 மணி நேரமாக தவிக்கும் உறவினர்கள்

அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நர்ஸ் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உறவினர்கள் இரண்டு மணி நேரமாக