சாலையில் கிடந்த ரூ.25 லட்சம் மதிப்பு மதுபானங்கள் அள்ளிச்சென்ற மதுப்பிரியர்களால் பரபரப்பு

மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திண்டுக்கல் அருகே விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததை அடுத்து சிதறிக்கிடந்த மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மதுப்பிரியர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மதுபான லாரி ஒன்று குடோனில் இருந்து மதுபானங்களை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த லாரி டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

ஆனால் அந்த லாரியில் இருந்த சுமார் 25 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களின் அட்டைப்பெட்டிகள் சாலையில் சிதறிக் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் காயமடைந்த டிரைவரையும் அவரது உதவியாளரும் காப்பாற்றாமல் மதுபானங்களை அள்ளி செய்வதிலேயே குறியாக இருந்தனர். ஒவ்வொருவரும் கை நிறைய மது பாட்டில்களை அள்ளிச் சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மது பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்த மதுப்பிரியர்களை அடித்து விரட்டினர். இந்த விபத்தில் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் சேதமடைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

More News

நடுரோட்டில் கொள்ளை முயற்சி: கணவரை காப்பாற்றிய இளம்பெண்ணின் வீரம்!

பெங்களூரில் நடுரோட்டில் திடீரென கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையடிக்க முயன்றபோது கணவரை அவரது மனைவி வீரமுடன் காப்பாற்றிய சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முதல் படத்தின் சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த எமிஜாக்சன்

பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'மதராசபட்டணம்' என்ற திரைப்படத்தில் தான் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் என்பது தெரிந்ததே.

காமக்கொடூரன் கையில் மாட்டிய 300 குழந்தைகள்!!! ஆண்டுக் கணக்கில் தொடர்ந்த அவலம்!!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப் பட்டு இருக்கிறார்

என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபேவின் குற்றப் பட்டியல்!!! ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள்!!!

போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 8 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியான விகாஸ் துபேவை பற்றித்தான் தற்போது இந்தியா முழுக்க பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதிகரித்து வரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: கொரோனாவில் இருந்து மீள்கிறதா தமிழகம்?

தமிழ்நாட்டில் இன்று 3680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்