17 வருடமாக இரண்டு கால்களை இழந்து இலவச மருத்துவம்! பெண் டாக்டரை கொண்டாடும் மக்கள்!

  • IndiaGlitz, [Monday,May 20 2019]

 

அனைத்து தொழில்களும் பணத்தை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் இந்த காலகட்டத்தில், கடந்த 17 வருடமாக இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மக்களுக்காக சேவை செய்து வருகிறார் சீனாவைச் சேர்ந்த லி- ஜுகோங்க் என்கிற பெண் மருத்துவர்.

சராசரி குழந்தைகள் போல் பிறந்த லி- ஜுகோங்க் 4 வயது இருக்கு போது ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராத விதமாக இரண்டு கால்களையும் இழக்கும் நிலை உருவானது.

கால்களை இழந்த போதிலும், பெற்றோர் மற்றும், உறவினர்கள், நண்பர்கள் கொடுத்த ஊக்கம் இவரின் கனவு படிப்பான மருத்துவ படிப்பை முடிக்க வைத்தது. பின் தனியாக கிளினிக் துவங்காமல், ஏழை, எளிய மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு மருத்துவம் பார்க்க துவங்கினார். இது மட்டுமே தனக்கு நிம்மதியை தருவதாகவும் கூறுகிறார் லி- ஜுகோங்க்.

17 வருடமாக இந்த மருத்துவ பணியை மேற்கொண்டு வரும் இவர், தற்போது மூளை சார்ந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். என்னினும், மக்களுக்கு உதவி செய்வதை மட்டும் நிறுத்தி கொள்ளவில்லை. இலவசமாக தன்னுடைய சேவையை செய்து வரும் இவரிடம், யாரேனும் விருப்பப்பட்டு பணம் கொடுத்தால், அதனை மற்றவருக்கு மருந்துகள் வாங்க உபயோகித்து கொள்கிறார்.

இவரின் இந்த செயல் சமூகவலைதளத்தில் உள்ள அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் மருத்துவர் லி- ஜுகோங்கை அந்த ஊர் மக்கள் கடவுளுக்கு நிகராகவே பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கடமை தான் முக்கியம்! கல்யாணத்தை தள்ளி வைத்த தம்பதிகள்!

நேற்றைய தினம் இமாச்சலப் பிரதேசம் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் நாடாளு மன்ற தேர்தல் 7 ஆவது கட்டமாக நடந்து முடிந்தது...

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சூர்யா?

இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் இதுவரை 'சென்னை 600028 2' மற்றும் 'ஆர்.கே.நகர்' ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளது.

விஐபி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு: பிரபல நடிகை கணிப்பு

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிந்துவிட்ட நிலையில் தேசிய, மாநில ஊடகங்கள் நேற்று மாலை முதல் தங்களது எக்சிட்போல் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

உலகிலேயே இதுதான் முதல்முறை: ரஜினிகாந்த்தின் பாராட்டு யாருக்கு தெரியுமா?

இயக்குனர், நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளாவிட்டாலும்

200 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் கஷ்டம்: சென்னையின் நிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர்கஷ்டம் இருந்து வரும் நிலையில் ஃபானி புயலால் மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயலும் ஒடிஷா பக்கம் திரும்பிவிட்டதால்