close
Choose your channels

கடைசியில செல்லத்தையும் அழ வச்சிட்டிங்களே! பிக்பாஸை திட்டித்தீர்த்த லாஸ்லியா ஆர்மி

Saturday, June 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக ஒருபக்கம் சொந்தக்கதை, சோகக்கதை இன்னொரு பக்கம் சண்டை சச்சரவு என போய் கொண்டிருந்த நிலையில் இதில் எதிலும் பங்கு பெறாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்து வந்த ஒரே நபர் லாஸ்லியாதான். அவரது அமைதிக்கு பின் ஒரு பெரிய சோகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் கமல்ஹாசன் தோன்றும் இன்றைய நாளில் லாஸ்லியா தனது சோகக்கதையை சொல்லி கதறியழ பிக்பாஸ் குடும்பமே கண்ணீர்க்கடலில் மூழ்கிவிட்டது. ஒவ்வொரு இலங்கை தமிழ் மக்களுக்கும் ஒவ்வொரு சோகக்கதை இருக்கும் என்றாலும் லாஸ்லியாவின் சோகக்கதைக்கு எந்த அளவு வீரியம் இருக்கும் என்பதை மற்ற போட்டியாளர்களின் அழுகையில் இருந்து தெரிய வந்தது. இதனையடுத்து லாஸ்லியாவின் சிரிப்பை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட அவருடைய ஆர்மியினர் அவருடைய அழுகையை பார்த்துவிட்டு பிக்பாஸை திட்டி தீர்த்து கொண்டிருக்கின்றனர்.

வழக்கம்போல் புரிந்த மொழியில் புரியாத கருத்துக்களை கூறும் கமல்ஹாசன், 'காத்திருந்து காத்திருந்து கருணை மழை பெய்தது. அன்பாய், உள்ளங்களின் உண்மை முகங்கள், உணர்வுகளை உறுதியோடு பகிர்ந்து கொண்டது ஒரு புதிய குடும்பம் பூத்திருக்கின்றது. குடும்பத்தின் தலைவனாக உங்கள் நான்' என்று கூறி புரமோவை முடித்துள்ளார்.

மொத்தத்தில் இளகிய மனம் கொண்ட லாஸ்மியா ஆர்மியினர் இன்றைய நிகழ்ச்சியை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.