விலங்குகளுக்கும் தடுப்பூசியா? புதிய பாதிப்பால் அமெரிக்க எடுத்த முக்கிய முடிவு!

  • IndiaGlitz, [Wednesday,October 20 2021]

அமெரிக்காவில் உள்ள உயிரியியல் பூங்காக்களில் தற்போது விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்திருக்கிறது. இந்தத் தடுப்பூசி விலங்குகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019 டிசம்பரில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பலத்த சேதத்தை உண்டாக்கி இருக்கிறது. முதலில் மனிதர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்காய் நகரில் முதன் முதலாக ஒரு நாய்க்குப் பரவத் தொடங்கியது. பின்னர் சிங்கம், புலி, மான், கொரில்லா எனப் பல விலங்குகளுக்கும் இந்த வைரஸ் நோய்த்தொற்றை ஏற்படுத்தியது. மேலும் இந்த நோய்த்தொற்று மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பல சோதனைக் கட்டங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் zoetis எனும் நிறுவனம் விலங்குகளுக்கு பிரத்யேகமாக கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து அனைத்து மாகாணங்களிலும் உள்ள உயிரியியல் பூங்காக்கங்கள், சரணாலயங்கள், விலங்கு பாதுகாப்பு மையங்களுக்குக் கிட்டத்தட்ட 11,000 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தத் தடுப்பூசிகள் முதற்கட்டமாக அழிந்துவரும் உயிரினங்களுக்குச் செலுத்தப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் லூசியானா மாகாணத்தில் உள்ள ஆடுபோன் உயிரியியல் பூங்காவில் மீன்வளம் சார்ந்த உயிரினங்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. மேலும் அழியும் நிலையில் இருக்கும் அனைத்து விலங்குகளுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தகவல்கள் கூறப்படுகின்றன.

More News

காவல் ஆணையரிடம் புகார் அளித்த உஷா ராஜேந்தர்: சிம்பு பிரச்சனையா?

நடிகர் சிம்பு படங்களின் பிரச்சனை குறித்து உஷா ராஜேந்தர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறீங்க: பிக்பாஸிடம் புகார் அளித்த ஸ்ருதி

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் அனைத்து நாட்களிலும் அபிஷேக், தான் ஹீரோவாக வேண்டும் என்று எடுக்கும் கோமாளித்தனமான முயற்சிகள்

வாஹா எல்லையில் தல அஜித்: வைரல் புகைப்படங்கள்!

இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாஹா எல்லையில் தல அஜித் ரசிகர்கள் மற்றும் ராணுவ வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

தீபாவளி ரேஸில் இணையும் சசிகுமார் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

வரும் தீபாவளி திருநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' மற்றும் விஷால் நடித்த 'எனிமி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது

வாகா எல்லையில் இராணுவ வீரர்களுடன் கைக்குலுக்கும் தல அஜித்… வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் தல அஜித் பைக் ரேஸ்,