ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளம் காதலர்கள்: காதல் தோல்வியா?

  • IndiaGlitz, [Thursday,November 21 2019]

காதலை பெற்றோர்கள் ஏற்க மறுத்ததால் இளம் காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் பண்ருட்டி அருகே நடந்துள்ளது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொரப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண், நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் மதன் என்ற பைக் மெக்கானிக் பணி செய்யும் வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்

ஆனால் இரு தரப்பு பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இருவரும் பழக கூடாது என்ற நிபந்தனையும் விதித்தனர்

இந்த நிலையில் தங்களது காதல் நிறைவேறாததால் மனமுடைந்து வருத்தத்தில் இருந்த சுவாதி மற்றும் மதன் நேற்று சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதல் நிறைவேறாததால் இளம் காதலர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
 

More News

ஏற்கனவே 6 பைக்: 7வது பைக் வாங்கித்தராததால் தற்கொலை செய்த இளைஞர்

ஏற்கனவே ஆறு பைக் இருந்தும் ஏழாவது பைக் அப்பா வாங்கித் தராத கோபத்தில் மனமுடைந்த மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

முதல்வர், துணை முதல்வரை சந்தித்த காமெடி நடிகர் சதீஷ்!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சதீஷூக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. திருமண வேலையை

வாழ வைத்த தெய்வங்களுக்கு நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் கோல்டன் ஐகான் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவில்

குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்டு, மாதம், தேதியை அறிவித்த சமந்தா!

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவிடம் செய்தியாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி, 'உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்?

திருமணமான 24வது நாளில் சென்னை பெண் தற்கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான 24 வது நாளில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது