close
Choose your channels

ரஜினி, கமல், விஜய் பட நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!

Tuesday, January 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த லைகா நிறுவனம் அடுத்ததாக தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுடன் இணைய இருக்கும் தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்துள்ளது

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்தின் ’தர்பார்’ கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ விஜய்யின் ’துப்பாக்கி’ உள்பட பல திரைப்படங்கள் தயாரானது என்பதும், தற்போது இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ’பொன்னியின் செல்வன்’ என்ற பிரமாண்டமான திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும் லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் காரணமாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சிவகார்த்திகேயனின் 19 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் மாஸ் அறிவிப்பை நாளை காலை 11 மணிக்கு பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.