இயக்குனர் ஷங்கர் மீது மீண்டும் ஒரு வழக்கு: லைகா எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Wednesday,June 16 2021]

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ’இந்தியன் 2’ என்ற திரைப்படம் உருவாகி வந்தது. இந்த திரைப்படத்தில் திடிரென ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை

இந்த நிலையில் திடீரென இயக்குனர் ஷங்கர், ராம் சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு திரைப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்த வழக்கு தொடர்ந்தது. இயக்குனர் ஷங்கர், தங்களது தயாரிப்பில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் தெலுங்கு திரைப்படத்தை இயக்க அனுமதிக்கக்கூடாது என்று இந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் பிற படங்களை எடுக்க தடை கோரி லைகா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இயக்குனர் ஷங்கர் புகார் அளித்துள்ளார்.

More News

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்தரங்க வீடியோ அனுப்பிய மர்ம நபர்: ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி!

பிரபல பாடகி ஒருவருக்கு மர்ம நபர் ஒருவர் அந்தரங்க வீடியோவை அனுப்பிய நிலையில் அந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள பாடகி,

தேசிய விருது பெற்ற இந்த பிரபல இயக்குனருடன் இணைகிறாரா ஆர்ஜே பாலாஜி!

'எல்கேஜி' மற்றும் 'மூக்குத்தி அம்மன்' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி நடித்த ஆர்ஜே பாலாஜி தற்போது பாலிவுட் படம் ஒன்றில் ரீமேக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஒருவர் ரத்ததானம் செய்யலாமா?

ரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பு விருப்பம் உடைய இளைஞர்கள் இரத்ததானம் செய்ய முன்வரவேண்டும்

பச்சை நிறத்தில் பூஞ்சை தொற்று… ஒருவர் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை