close
Choose your channels

இயக்குனர் ஷங்கர் மீது மீண்டும் ஒரு வழக்கு: லைகா எடுத்த அதிரடி முடிவு!

Wednesday, June 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ’இந்தியன் 2’ என்ற திரைப்படம் உருவாகி வந்தது. இந்த திரைப்படத்தில் திடிரென ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை

இந்த நிலையில் திடீரென இயக்குனர் ஷங்கர், ராம் சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு திரைப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்த வழக்கு தொடர்ந்தது. இயக்குனர் ஷங்கர், தங்களது தயாரிப்பில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் தெலுங்கு திரைப்படத்தை இயக்க அனுமதிக்கக்கூடாது என்று இந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் பிற படங்களை எடுக்க தடை கோரி லைகா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இயக்குனர் ஷங்கர் புகார் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.