அஜித் கேட்டது ரூ.100 கோடி சம்பளம், தயாரிப்பாளர் தந்ததோ ரூ.105 கோடி!

  • IndiaGlitz, [Thursday,March 24 2022]

நடிகர் அஜித் 100 கோடி சம்பளம் கேட்டதாகவும் ஆனால் தயாரிப்பாளர் 105 கோடி தருவதற்கு ஒப்புக் கொண்டதாகவும் வெளிவரும் தகவல் கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நடித்த ’வலிமை திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டிய 300 கோடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதனை அடுத்து அஜித்தின் சம்பளம் உயரும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜீத் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகயிருக்கும் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க லைக்கா நிறுவனத்திடம் அஜித் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் ஆனால் லைகா நிறுவனம் 105 கோடி தருவதாக ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சம்பள விவகாரம் குறித்த தகவல் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவருக்கு மட்டுமே தெரியும் விஷயம் என்பதால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? வைரலாகும் "சின்ன தல" யின் கணிப்பு!

சிஎஸ்கே அணி ரசிகர்களால் “சின்னத்தல“ என்று கொண்டாடப்பட்ட சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறாதது

நண்பர் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின் டுவிட்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து கூற அதற்கு நன்றி கூறி முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் டுவிட் செய்துள்ளார். 

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு...இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய்சேதுபதி

தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு  கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான்.

30 வருடங்களுக்கு பின் கே பாக்யராஜ் உடன் இணையும் நடிகை!

30 வருடங்களுக்கு முன்பு கே பாக்யராஜ் ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை: திடுக்கிடும் காரணம்!

சென்னையை சேர்ந்த தேசிய கபடி வீராங்கனை தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.