ரூ.2 கோடியை அடுத்து மீண்டும் ரூ.1 கோடி: லைகாவின் தாராளமான நிதியுதவி!

  • IndiaGlitz, [Tuesday,June 22 2021]

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகாவின் சேர்மன் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் கொரோனா நிவாரண பணிக்காக ரூபாய் 2 கோடிக்கான காசோலையை லைக்கா நிறுவனத்தின் நிர்வாகிகள் திரு.GKM தமிழ்குமரன் மற்றும் திரு. நிருதன், திரு. கெளரவ் ஆகியோர் அளித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது தமிழக அரசை அடுத்து பெப்சி தொழிலாளர்களுக்கும் லைகா நிறுவனம் ரூபாய் ஒரு கோடி நிவாரண நிதி அளித்து உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு இல்லாமல் பெப்சி தொழிலாளர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்கள் சார்பில் ரூபாய் ஒரு கோடிக்கான காசோலை பெப்ஸி தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை லைகாவின் நிர்வாகிகளான தமிழ்குமரன், நிருதன், கௌரவ் ஆகியோர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

இந்த ஒரு கோடி ரூபாய் விரைவில் பெப்சி தொழிலாளர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் வீட்டின் முன் திடீரென தர்ணா போராட்டம் நடத்தும் ரசிகர்கள்: என்ன காரணம்?

நடிகர் விஜய் வீட்டின் முன்பு திடீரென அவரது ரசிகர்கள் தர்ணா போராட்டம் நடத்துவதாக புகைப்படங்களுடன் கூடிய செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காவிரியை பாலைவனமாக்க, கர்நாடக அரசு நயவஞ்சக முயற்சி எடுக்கிறது....! சீமான் காட்டம்...!

காவிரிப்படுகையைப் பாலைவனமாக்கும் வகையில் நடைபெறுகிற மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்

மன்மத கொள்ளையன் முத்து சங்கு....! ஆபாச ஆபிசருக்கு ஆப்பு வைத்த மனைவி...!

மற்ற பெண்களிடம் உல்லாசமாகவும், தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் காவலர் மீது மனைவி புகாரளித்துள்ளார்.

கோடிகளில் புரண்ட மதன் சேனல்களின், காத்து வாங்கும் நிலை....! மாஸ் காட்டிய காவல்துறை....!

பப்ஜி மதனின் யுடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதையடுத்து, சென்னை காவல் துறையினர் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.

ஏ.எல்.விஜய்யின் 'தலைவி' சென்சார் தகவல்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தலைவி'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்