close
Choose your channels

லைகாவின் அடுத்த படம்: இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்!

Wednesday, August 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது

லைக்கா சுபாஸ்கரன் வழங்கும் இந்த படத்தில் ராஜ்கிரண், அதர்வா,  ஆஷிகா ரங்கநாத் உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தஞ்சையில் தொடங்கி உள்ளதாகவும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், ஒரே கட்டமாக 50 நாட்களில் இந்த படத்தை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப பொழுதுபோக்கு  சித்திரமாக உருவாகிறது.  இப்படத்தில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜேபி, ஆர்.கே. சுரேஷ், சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே,  சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா, ஜி.எம். குமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் உட்பட ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடிக்கிறது.

ஜிப்ரான் இசையில் லோகநாதன் ஒளிப்பதிவில், ராஜா முஹம்மது படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் லைகா நிறுவனத்தின் மற்றொரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.