ரஜினி,கமல், தனுஷ், சிம்பு, எஸ்கே... 9 படங்களை தயாரிக்க லைகா முடிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா அடுத்த மூன்று ஆண்டுகளில் ரஜினி, கமல், சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்டோரின் படங்கள் உள்பட மொத்தம் ஒன்பது பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு, விஜய் நடித்த 'கத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் லைக்கா நிறுவனம் தமிழ் திரைப்படங்களை தயாரிக்கத் தொடங்கியது. அதன் பின் பல வெற்றி படங்களை தயாரித்தது. இந்த ஆண்டு கூட 'எம்புரான்' படத்தை தயாரித்து உள்ள லைக்கா, அடுத்ததாக விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படம் மற்றும் கமல்ஹாசனின் 'இந்தியன் 3' படங்களை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் லைக்கா நிறுவனம் ஒன்பது படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த படங்களை லைகா நிறுவனம் மகாவீர் ஜெயின் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் தமிழில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments