2.0 வெற்றி எதிரொலி: மீண்டும் ரஜினியுடன் இணையும் லைகா

  • IndiaGlitz, [Thursday,November 29 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த '2.0' திரைப்படம் இன்று வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினி-ஷங்கரை நம்பி எத்தனை கோடி முதலீடு செய்தாலும் அந்த பணம் லாபத்துடன் திரும்பிவிடும் என்பதற்கு இந்த படம் மீண்டும் ஒரு உதாரணமாக திகழ்கிறது.

இந்த நிலையில் '2.0' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை அடுத்து தற்போது மீண்டும் ஷங்கருடன் இணைந்து 'இந்தியன் 2' என்ற படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதேபோல் ரஜினியின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த இன்னொரு படமான 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதால் குறுகிய இடைவெளியில் இன்னொரு திருவிழா ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ் சினிமாவை உலக சினிமா திரும்பி பார்க்கும்: 2.0 குழுவினர்களுக்கு எஸ்.தாணு வாழ்த்து

ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளது.

'2.0' திரைப்படத்தை திரையிடக்கூடாது என போராட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று வெளியாகி உலகமே தமிழ் சினிமாவை நோக்கி திரும்பி பார்க்கும் வகையில் செய்துள்ளது

ஷங்கரின் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

பிரமாண்டம் என்றால் என்ன? என்பதற்கு உதாரணமாக திகழும் இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' இன்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கேரள முதல்வருக்கு கமல், விஜய்சேதுபதி நன்றி

தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி கஜா புயல் தாக்கி பலத்த சேதங்களை உண்டாக்கிய நிலையில் தமிழகத்தில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புயல் நிவாரண நிதி குவிந்து வருகிறது.

சிவகார்த்திகேயனின் 2வது தயாரிப்பு படத்தின் தகவல்கள்

தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்தில் மாஸ் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற சிவகார்த்திகேயன், முதல்முறையாக தயாரித்த 'கனா' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.