close
Choose your channels

மனைவியின் மிரட்டலால் இதை செய்தேன்: 'சிங்கப்பெண்ணே' பாடலாசிரியர்

Thursday, November 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடலாசிரியரும் விஜய்யின் ‘பிகில்’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலை எழுதியவருமான விவேக், தனது மனைவியின் மிரட்டலால் வசனகர்த்தாவாக மாறியதாக தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான ‘Frozen 2' திரைப்படத்திற்கு ஸ்ருதிஹாசன் மற்றும் டிடி உள்பட பல பிரபலங்கள் டப்பிங் குரல் கொடுத்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பிற்கு பாடலாசிரியர் விவேக் வசனம் எழுதியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து விவேக் கூறியதாவது: உலகின் பிரபல நிறுவனமான டிஸ்னியுடன் இப்படி ஒரு அற்புதமான படத்தில் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி. அதிலும் ஸ்ருதி ஹாசன், திவ்ய தர்ஷினி போன்ற திறமை மிக்க ஆளுமைகளுடன் பணிபுரிந்ததில் மேலும் மகிழ்ச்சி. அவர்கள் தங்கள் பின்னணி குரலால் கதாபாத்திரங்களுக்கு தத்ரூபமாக உயிரூட்டியுள்ளார்கள். படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் பலருக்கும் முன் மாதிரியாக விளங்குகிறார்கள்.

நான் முதல் முறையாக வசனம் எழுதும் படமிது. நாம் வாழ்வில் பல சிறு விசயங்களை இழந்திருப்போம். ஒரு கட்டத்தில் நாம் நம்மையே தொலைத்திருப்போம். இப்படத்தில் எனக்கு பிடித்தது, என்ன ஆனாலும் மனிதத்தை மட்டும் வாழ்வில் தொலைத்துவிடக்கூடாது எனும் அருமையான கருத்து தான். எல்லாவற்றிற்கும் மேலாக என் மனைவியின் மிரட்டலால் தான் இந்தப்படத்தில் பணியாற்றினேன். அவர் இப்படத்தின் தீவிர ரசிகை என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.