close
Choose your channels

நான் ஒரு ராணி, உலகை எப்படி ஆள்வது என்பது எனக்கு தெரியும்: ஐஸ்வர்யா தத்தா

Wednesday, October 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற ரித்விகாவை விட இரண்டாமிடம் பெற்ற ஐஸ்வர்யா தத்தாவுக்கு தான் கோலிவுட் திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரித்திவிகா நடித்த ஒரு படம் கூட இன்னும் வெளியாகாத நிலையில் ஐஸ்வர்யா தற்போது கன்னித்தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பொல்லாத உலகின் பயங்கர கேம் மற்றும் அலேகா ஆகிய நான்கு படங்களில் அவர் நடித்து முடித்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நான்கு படங்களும் மிக விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா தத்தா தனது சமூக வலைப்பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கவர்ச்சி உடையில் அவர் நடனம் ஆடுவது போல் தோன்றும் இந்த வீடியோவில் ’நானொரு ராணி! இந்த உலகை எப்படி ஆள்வது என்பது எனக்கு தெரியும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஐஸ்வர்யாவுக்கு ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டது என்பதும், இந்த கொடுங்கோல் ராணி கேரக்டரில் ஐஸ்வர்யா பிச்சு உதறினார் என்பதும் தெரிந்ததே.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.