close
Choose your channels

சிவகார்த்திகேயன் கேட்ட முதல் கேள்வி: 'Mr.லோக்கல்' அனுபவம் குறித்து எம்.ராஜேஷ்

Thursday, April 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி முடித்துள்ள ''Mr.லோக்கல்'' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இந்த படம் குறித்து அளித்த பேட்டி ஒன்றில் எம்.ராஜேஷ் கூறியதாவது:

'Mr.லோக்கல்' படத்தின் கதையை சிவகார்த்திகேயனிடம் சொன்னதும், அவர் கேட்ட முதல் கேள்வி இந்த படத்தின் நாயகி யார்? என்பதுதான். ஏனெனில் அந்த கேரக்டர் அந்த அளவுக்கு போல்டானது. அதன்பின்னர் அவரே இந்த கேரக்டருக்கு நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்று கூறினார். என்னுடைய எண்ணமும் அதாகவே இருந்தது.

'சிவா மனசுல சக்தி' படத்தை மாஸா செய்தா எப்படி இருக்குமோ அந்த படம் தான் ''Mr.லோக்கல்'. அதனால் இந்த படத்தை 'எஸ்.எம்.எஸ் 2.0'ன்னு கூட சொல்லலாம் என்று ராஜேஷ் கூறியுள்ளார்.

மேலும் தம்பி ராமையா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாகவும், அவர் நயன்தாராவுடன் படம் முழுவதும் வருவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய இயக்குனர் ரஜேஷ், யோகிபாபு, சதீஷ், ரோபோசங்கர் என இந்த படத்தில் ஒரு காமெடி கூட்டமே இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அம்மா கேரக்டரில் ராதிகா நடித்திருப்பதாகவும், அனைத்து காட்சிகளையும் அவர் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார் என்றும் எம்.ராஜேஷ் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.