பாகிஸ்தான் மக்களின் மனங்களையும் வென்ற தோனி & கோ

  • IndiaGlitz, [Tuesday,June 20 2017]

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே அது போட்டி அல்ல போர் என்று இருநாட்டு ரசிகர்களும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் மக்களின் மனங்களையும் இந்திய வீரர்கள் வென்ற உணர்ச்சிமிக்க சந்திப்பு ஒன்று நடந்துள்ளது.

இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு அடிகோலியவர் தொடக்க ஆட்டக்காரர் அசார் அலி என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பொறுமையாக விக்கெட் இழக்காமல் எடுத்த 59 ரன்கள் தான் வெற்றிக்கு அஸ்திவாரம். இந்த நிலையில் இன்று அதிகாலை அசார் அலியின் இரண்டு குழந்தைகளும் இந்திய அணி வீரர்களான தோனி, விராத் கோஹ்லி, மற்றும் யுவராஜ்சிங் ஆகியோர்களுடன் ஜாலியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

'என்னுடைய குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கிய இந்திய வீரர்களுக்கு என மனமார்ந்த நன்றி' என்று புகைப்படத்துடன் அசார் அலி தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். எதிரணி மட்டுமின்றி எதிரி நாட்டு அணியாகவும் உள்ள பாகிஸ்தான் வீரரின் குழந்தைகளுடன் இந்திய வீரர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் வைரலாகி பாகிஸ்தான் மக்களின் மனங்களையும் வென்றது.

ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னர் தோனி, கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் குழந்தையை, தன் கையில் தூக்கி வைத்தபடி நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது மீண்டும் இந்த புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

More News

கெத்து : ஆம்புலன்ஸ்க்காக ஜனாதிபதி காரை தடுத்து நிறுத்திய காவலர்

முதலமைச்சர் அல்லது அமைச்சர் வருகிறார் என்றால் சுமார் அரைமணி நேரம் வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்கும் அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதைத்தான் நாம் இதுவரை பலமுறை பார்த்துள்ளோம்.

செல்பி பிரியர்களுக்கு ஆப்பு வைத்த உபி காவல்துறை

கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் மத்தியில் செல்பி எடுக்கும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

விவசாயத்திற்காக சாப்ட்வேர் பணியை உதறித்தள்ளிய தமிழக இளைஞர்

விவசாயம் என்றாலே பாதுகாப்பு இல்லாத தொழில் என்றும், விவசாயம் பார்ப்பவர்கள் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றே கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துகின்றன.

இளையதளபதி விஜய்யின் மாஸ் பஞ்ச் டயலாக்குகள்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக பஞ்ச் டயலாக் மிகப்பொருத்தமாக அமைந்த நடிகர் விஜய் தான் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும்..

சட்டசபையில் இருந்து கருணாஸ் எம்.எல்.ஏ திடீர் வெளிநடப்பு

பிரபல நகைச்சுவை நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் அதிமுகவின் சசிகலா அணிக்கு முழு ஆதரவு தந்து கொண்டிருந்த நிலையில் இன்று முதலமைச்சரின் பதில் ஒன்றுக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சபையில் இருந்து வெளியேறினார்...