close
Choose your channels

சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பாளருடன் இணைந்தது சிம்புவின் 'மாநாடு'

Thursday, January 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் ரீமேக் உரிமையை பெற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக், டப்பிங் உரிமையை பெற பல முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டன என்பதும் இந்த நிலையில் தற்போது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் ’மாநாடு’ படத்தின் அனைத்து மொழிகளின் ரீமேக் உரிமை மற்றும் தெலுங்கு டப்பிங் தியேட்டர் உரிமையை பெற்று இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கவுள்ள ‘எஸ்.கே.20’ படத்தை தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து விரைவில் ‘மாநாடு’ திரைப்படம் தெலுங்கில் டப் செய்து பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும், அதேபோல் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.