சிம்புவின் 'பத்து தல' படத்தில் இணைந்த 'மாநாடு' பிரபலம்!

  • IndiaGlitz, [Tuesday,January 25 2022]

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்தில் பணிபுரிந்து அனைவரும் பாராட்டுகளைப் பெற்ற பிரபலம் ஒருவர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படமான ‘பத்து தல’ என்ற திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களில் ஒன்று ‘பத்து தல’ என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ‘பத்து தல’ படத்தில் பிரபல எடிட்டர் பிரவீன் கே.எல் அவர்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் எடிட்டிங் பணியை சூப்பராக பிரவீன் செய்தார் என்பதும் அவருக்கு விமர்சகர்களின் பாராட்டு குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சிம்புவின் ‘பத்து தல’ படத்திலும் மீண்டும் எடிட்டர் பிரவீன் இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பத்து தல’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மார்ச் முதல் வாரம் தொடங்க இருப்பதாகவும் இதில் சிம்பு உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிம்புவுடன், கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்பதும் ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார் என்பதும், ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அஜித் 61' படத்தில் 22 ஆண்டுகள் கழித்து அஜித்துடன் மீண்டும் இணையும் நடிகை!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும்

ரோல்ஸ்ராய் கார் வழக்கில் அதிரடி தீர்ப்பு: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை விஜய் இறக்குமதி செய்த நிலையில் அந்த காருக்கு வரிவிலக்கு வேண்டும் என விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பெரிய பட்ஜெட் படத்தை இயக்கும் சுசீந்திரன்: 7வது முறையாக இணையும் பிரபலம்!

இயக்குனர் சுசீந்திரன் இதுவரை மீடியம் பட்ஜெட்டில் படங்களை இயக்கி வந்த நிலையில் பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவருடன் ஏழாவது முறையாக பிரபலம் ஒருவரும் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட நடிகை மீதே வழக்கா? 15 ஆண்டு நடந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு!

பிரபல நடிகை மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட வரே அவர்தான் என 15 ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்

கொரோனாவும், கல்யாணமும் ஒன்னுதான்? ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகை!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்துவரும் சோனாக்ஷி சின்ஹாவிடம்