ஓடிடியில் 'மாநாடு' ரிலீஸா? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகவல்!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது என்பதும் அந்த படப்பிடிப்பும் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்புவின் ’மஹா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருப்பது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்ட நிலையில் ‘மாநாடு’ திரைப்படமும் ஓடிடியில் வெளியாகப் போவதாக செய்திகள் கசிந்து வருகிறது. இந்த செய்தியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளார்
‘மாநாடு’ திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளிவரும் என்றும் தான் உறுதியாக இருப்பதாகவும், கொரோனா நிலவரம் சரியானால் ஆயுதபூஜை விடுமுறை நாளில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து ‘மாநாடு’ திரைப்படம் எத்தனை மாதங்கள் காலதாமதமானாலும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, ஒய்ஜி மகேந்திரன், பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு கிடைக்க போக்கும் ஆச்சரியம்?

இந்த ஆண்டு விஜய் தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தடுப்பூசி போட்டதும் டிரேட்மார்க் சிரிப்பை வெளிப்படுத்திய 'குக் வித் கோமாளி' ரித்திகா!

கொரோனா வைரஸ் பாதிப்பு நெருங்காமல் இருக்க வேண்டுமென்றால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலர்

இவங்க தான் பொன்னாட: 'பகவான்' பட அப்டேட்டை கொடுத்த ஆரியின் வீடியோ வைரல்

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி, தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்', 'அலேகா' மற்றும் 'பகவான்' ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்

தலைமறைவாகவுள்ள யூடியூப் மதன் மனைவி கைது: போலீஸார் தீவிர விசாரணை!

மதன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சிறுவர், சிறுமிகளிடம் விளையாடியதாகவும் அப்போது அவர் சிறுவர் மற்றும் சிறுமிகளிடம் ஆபாசமாக

கொரோனாவுக்கு மகனை இழந்த நடிகை: தீவிர சிகிச்சை பிரிவில் கணவர்!

தமிழ் நடிகை ஒருவரின் மகன் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அவரது கணவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது