close
Choose your channels

'மாரி 2 'ரெளடி பேபி பாடலை எழுதியதும் பாடியதும் யார் தெரியுமா?

Tuesday, November 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலான 'ரெளடி பேபி பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த பாடலின் தகவல்களை தற்போது இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். யுவன்ஷங்கர் ராஜாவின் அட்டகாசமான இசையில் உருவான 'ரெளடி பேபி' பாடலை எழுதியதும் பாடியதும் தனுஷ் தான் என்பது கூடுதலான சிறப்பு தகவல்.

எனவே தனுஷ் நடித்து, எழுதி, பாடிய பாடல் நாளை வெளிவரவுள்ளது என்ற தகவல் அவரது ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. நாளை இந்த பாடல் இணையதளங்களை அதிர வைக்கும் என்பதற்கான அறிகுறி இப்போதே தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.