அசிங்கமாக பேசியே ஆடி கார் முதல் அடுக்குமாடி வரை...! "ஆபாச" மதனின் சொத்துமதிப்பு....!

  • IndiaGlitz, [Thursday,June 17 2021]

ஆபாசமகாவும், அதிகாரமாகவும் பேசிய பப்ஜி மதன் தலைமறைவானதை தொடர்ந்து, அவரது மனைவி கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

யுடியூப் தளம் :

மதனின் சேனலை பப்ஜி விளையாடக்கூடிய 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள், சிறுமிகள், இளம்பெண்கள் பார்த்துவருகிறார்கள். பப்ஜி போன்ற லைவ் வீடியோ கேம்களில் எப்படி எளிதில் எளிதாக வெல்வது என்பது குறித்து, ஆபாசமாக பேசுவது மூலம் இவன் பிரபலமானான். குறிப்பாக மதனுடன் விளையாடும் சகபோட்டியாளர்கள் மற்றும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளான். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தால், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது, தமிழகத்தில் உள்ள டாப் வக்கீல்கள் என் கையில் உள்ளனர். பல லட்சங்களை கொட்டி என்னால் அவர்களை விலைக்கு வாங்க முடியும். சேனல் போனாலும் பிரச்சனை இல்லை, ரசிகர்களிடம் பரிதாப ஓட்டுக்கள் வாங்கி, மற்றொரு சேனல் ஆரம்பித்து விடுவேன் என்று கூறியது பணத்திமிரின் உச்சம் எனலாம். ஆதரவற்ற மக்களுக்கு உதவுவதாகவும், இளைஞர்களிடம் கூகிள்-பே மூலம் காசு வாங்கி ஏமாற்றியுள்ளான் இந்த கொடூரன்.

மதன் மீது தமிழகம் முழுவதுமாக பல மாவட்டங்களில் இருந்து, 159 புகார்கள் இணையம் மூலமாக அளிக்கப்பட்டுள்ளது. தலைமறைவான மதனை தேடி சேலம், பெருங்களத்தூர் விரைந்த மத்திய புலனாய்வு காவல் துறையினர் அவரது மனைவியை கைது செய்தும், அவரது அப்பாவிடமும் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் உண்மைகளை அவர் மனைவி கிருத்திகா கூறினார்.

கிருத்திகா உடந்தை:

மதன் நடத்தும் இரண்டு யுடியூப் சேனல்களுக்கும் கிருத்திகா தான் அட்மினாக இருந்துள்ளார். இவருடைய மெயில் ஐடியை வைத்து தான் யுடியூப் -க்கான எல்லா வேலைகளும் துவங்கப்பட்டுள்ளது. மனைவிக்கு தெரிந்தே தான் மதன் இந்த கேவலமான வேலைகளை செய்துள்ளான். அவன் செய்யும் தவறுக்கு மனைவி உடந்தையாக இருந்த சம்பவம் காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சொத்து மதிப்பு :

சிறிய உணவுக்கடை வைத்திருந்த மதனின் சொத்து மதிப்பு தற்போது ரூ. 3 கோடி முதல் ரூ.4 கோடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக யுடியூப் சேனல்கள் மூலம் ஆபாச பேச்சுக்கள் பேசியே,மாத வருமானம் 7 லட்சம் வரை சாதாரணமாக சம்பாதித்தாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் 2 BMW கார்கள் மற்றும் 2 வீடுகள் உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றது. ஆனால் மதனிடம் ஆடி கார் உள்ளதாகவும் சமீபத்தில், யுடியூப் தளத்தில் ஆதாரங்களுடன் கூடிய வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், தொழில் நுட்ப உதவியுடன் ஆபாச மதனை பிடிக்க பல திட்டங்களை வகுத்து வருகின்றனர். மதனின் சொகுசு கார்களை பறிமுதல் செய்யவும், காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதனால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், ஆன்லைன் மூலமாக தைரியமாக புகார் கொடுக்கலாம், அவரது தகவல்கள் பாதுகாக்கப்படும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

More News

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு....! நிம்மதி பெருமூச்சில் மக்கள்...!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட துவங்கியுள்ளனர்.

'இந்தியன் 2' வழக்கு: லைகாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்!

'இந்தியன் 2' தயாரிப்பு நிறுவனம் லைகாவின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனாவுக்கு பலியான தமிழ் திரைப்பட நாயகன்: அதிர்ச்சியில் திரையுலகம்

கடந்த சில வாரங்களாகவே தமிழ் திரையுலகை சேர்ந்த சிலர் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பாக இயக்குநர் கேவி ஆனந்த், இயக்குனர் தாமிரா உள்ளிட்ட பலரும் உயிரிழந்து

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தானா?

தல அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாகவும்

நடிகை வரலட்சுமியின் ஆச்சரியமளிக்கும் யோகா வீடியோ!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி என்பதும் இவர் தற்போது சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும் லாக்டவுன் முடிந்தவுடன் அவர் நடித்து முடித்துள்ள படங்கள் ஒவ்வொன்றாக