close
Choose your channels

கணவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுத்த ஜெ.தீபா

Saturday, January 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா சமீபத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பில் இருந்து கருத்துவேறுபாடு காரணமாக தீபாவின் கணவர் மாதவன் விலகி “எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற புதிய அமைப்பை தொடங்கினார்.

இந்த நிலையில் சமீபத்தில் மாதவனும், தீபாவும் இணைந்து செயல்படுவதென முடிவெடுத்தனர். அதுமட்டுமின்றி 'அதிமுகவுடன் விரைவில் இணைந்து செயல்பட போவதாகவும் சமீபத்தில் தீபா அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக மாதவனை தீபா நியமித்துள்ளார். அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தீபா அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.