close
Choose your channels

மதம் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலடி கொடுத்த மாதவன்

Friday, August 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வேலை வெட்டி இல்லாத சில நெட்டிசன்கள் பிரபலங்களை வம்புக்கு இழுப்பதையே ஒரு முழு நேர தொழிலாக வைத்திருப்பது தெரிந்ததே. அந்த வகையில் நடிகர் மாதவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஒரு புகைப்படத்தை சுட்டுக்காட்டி மதம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்றை நெட்டிசன் ஒருவர் எழுப்பியுள்ளார்., அந்த கேள்விக்கு மாதவன் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் மாதவனின் புகைப்படத்தில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு நடுவே சிலுவையும் இருந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன், 'இந்த புகைப்படத்தில் இந்து கடவுள்களின் அருகில் சிலுவை உள்ளதே? அது ஏன்? கிறிஸ்துவ தேவாலயங்களில் இந்து கடவுள்களின் படங்கள் உள்ளதா? நீங்கள் நடத்துவது எல்லாம் ஒரு போலி நாடகம் என பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்த மாதவன், 'உங்களை போன்றவர்களின் கருத்துகளுக்கு பதில் தரவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. ஏனெனில் நீங்கள் முதலில் சரியான மனநிலையில் இல்லை. அந்தப் படத்தில் சிலுவைக்கு பக்கத்தில் பொற்கோயில் சிலை உள்ளது. நீங்கள் அதை பார்க்கவில்லையா? அவ்வாறு பார்த்திருந்தால் நான் சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டதாக கேள்வியை எழுப்பியிருப்பீர்கள்

புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் பொருட்களில் பாதி நான் வாங்கியவை மீதி எனக்கு பரிசாக வந்தவை. எனக்கு சிறுவயதிலிருந்து எம்மதமும் சம்மதம் என்று கற்று கொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய மகனையும் அதுபோலவே வளர்த்து வருகிறேன். எனவே நான் என்னுடைய மதத்தை எப்படி மதிக்கின்றோனோ அதேபோல் அனைத்து மதங்களையும் மதிப்பேன். நான் தர்கா, குருதுவரா மற்றும் சர்ச் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்துள்ளேன். அந்த இடங்களில் எல்லாம் எனக்கு நிறையவே அன்பு கிடைத்துள்ளது. எனவே இந்த உலகத்தில் முக்கியமானது அன்பு தான். அந்த அன்பையும் அமைதியையும் நான் உங்களுக்கும் தருகிறேன்' என்று பதிலடி கொடுத்துள்ளார். மாதவனின் இந்த பதிலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.