பாதியில் உள்ள ஸ்ரீதேவி படத்தில் நடிக்கும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த மாதம் எதிர்பாராத வகையில் திடீரென மரணம் அடைந்தது இந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய செய்தது. அவரது உடல் அரசு முழு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டு அவரது சாம்பலும் ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது நடித்த ஒரு படம் முழுமை பெறாமல் பாதியில் உள்ளது. இந்த படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள படக்குழுவினர் ஸ்ரீதேவி நடித்த கேரக்டரில் நடிக்க நடிகை மாதுரி தீட்சித்தை அணுகியிருப்பதாகவும், அவரும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர், மாதுரி தீட்சித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜான்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அபிஷேக் வர்மா தற்போது இயக்கிவரும் படம் என் அம்மாவின் இதயத்துக்கு நெருக்கமானது. இந்த அழகான படத்தில் மாதுரிஜி பங்கேற்றுள்ளமைக்காக அப்பா, குஷி, நான் ஆகிய மூவருமே நன்றியுள்ளவர்களாக இருப்போம்' என்று தெரிவித்துள்ளார்.

 

More News

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வருமா? தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்ன?

இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வெயில் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும்

திருச்சி உஷாவின் மரணத்திற்கு காரணம் இதுதான்: நீதிபதியின் விளக்கம்

சமீபத்தில் திருச்சியில் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா-உஷா தம்பதியினரை விரட்டி சென்ற காவலர் ஒருவரின் மனிதநேயமற்ற செயலால், உஷாவின் உயிர் பரிதாபமாக பலியானது.

தில்லையில் தினேஷ் கார்த்திக் கட்-அவுட்! ரசிகர் மன்றம் எப்போது?

இதுவரை தமிழக இளைஞர்கள் கோலிவுட்டின் பெரிய ஸ்டார்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டும்தான் கட்-அவுட் வைத்து நாம் பார்த்துள்ளோம்

விஜய்யின் எளிமைக்கு எடுத்துக்காட்டு கூறிய ராதாரவி

விஜய் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவர் ஒரு எளிமையான மனிதர். உடன் நடிக்கும் நடிகர்களை ஊக்குவிப்பதை அவர் தவறுவதில்லை.

'காலா' நாயகிக்கு ரஜினி வீட்டில் இருந்து வந்த உணவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் நாயகி ஹூமா குரேஷிக்கு ரஜினி விட்டில் இருந்து உணவு வந்த தகவலை அவர் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.