close
Choose your channels

வாட்டர் டேங்கில் மலைபோல் கொட்டிக்கிடந்த பணம்… ஐ.டி ரெய்டில் சுவாரசியம்!

Monday, January 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அவரது நிலத்தடி நீர் தண்ணீர் தொட்டியில் இருந்து குவியல் குவியலாகப் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். வெறும் 500 ரூபாய் நோட்டுகளாகக் குவிந்து கிடந்த இந்தப் பணத்தைப் பார்த்து அதிகாரிகளே அசந்துபோன சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

சமீபத்தில் இந்தூரில் சென்ட் தயாரிக்கும் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் என்பவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.257 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்தை 16 அறைகள் கொண்ட தனது வீட்டின் ஒரு அறையில் அவர் பூட்டி வைத்திருந்த சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது மத்தியப்பிரதேச மாநிலம் தாமோ பகுதியில் வசித்துவரும் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய வீட்டு நிலத்தடி நீர் தொட்டியில் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளார். மேலும் இந்த நோட்டுகள் அனைத்தும் 500 ரூபாய்நோட்டுகளாக சிறிது தண்ணீரில் நனைந்திருந்ததைப் பார்த்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு உள்ளனர்.

மேலும் சங்கர் ராய் எனப்படும் அந்த தொழிலதிபருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் பரிசோதனையை மேற்கொண்ட அதிகாரிகள் கிட்டத்தட்ட 39 மணிநேர சோதனையில் 8 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ஆபரணப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.