close
Choose your channels

மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை தர வேண்டும்....! உயர்நீதிமன்றம் உத்தரவு....!

Tuesday, June 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு சென்னை, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக அரசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்க திட்டமிட்டுள்ள அரசு, தற்போது அதை செயல்படுத்தி வருகிறது. இதே போல் ரேஷன் அட்டையோ,  அடையாள அட்டையோ இல்லாத மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளுக்கும், உதவித்தொகை வழங்கவேண்டும் என்று, தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை கிரேஸ்பானு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளான  சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.  அதில் குடும்ப அட்டை வைத்திருக்கும், அரசி அட்டைதாரர்களான  2,596 திருநங்கைகளுக்கு, முதல்வர் நிவாரண நிதியில் முதல் தவணை செலுத்தப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் குடும்ப அட்டை இல்லாத 8,493 திருநங்கைகளுக்கு,  மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம் மூலமாக நிவாரண நிதி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை  அளிக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கை ஜூன்-14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.