close
Choose your channels

அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்: நீதிமன்றம் உத்தரவு

Monday, September 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டினர் உரிமை வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த நடைமுறை செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தவறும் பட்சத்தில் ரூ.500 அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் இதனை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு கடந்த 1ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது'ஓட்டுநர்கள் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை' என்றும் இந்த வழக்கு வரும் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட் கருத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் 6ஆம் தேதி முதல் அதாவது நாளை மறுநாள் முதல் அசல் ஓட்டுனர் உரிமம் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் வாகன ஓட்டுபவர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.