புரட்சி வரிகளுடன் பரபரப்பை ஏற்படுத்திய 'மதுரவீரன்' சிங்கிள் பாடல்

  • IndiaGlitz, [Saturday,November 18 2017]

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்து வரும் 'மதுரவீரன்' படத்தின் சிங்கிள் பாடல் இன்று காலை வெளிவந்து பட்டையை கிளப்பி வருகிறது. சமூக அவலங்களை தோலுரிக்கும் வகையில் கவிஞர் யுகபாரதி எழுதிய இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். 

'என்ன நடக்குது நாட்டுல' என்று தொடங்கும் இந்த பாடலில் 

கொள்ளை அடிச்சவன் கூட்டுல,
நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல. 
எதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம ,
அடங்கி ஒடுங்கி கிடப்பதால ஆளுக்காளு நாட்டாம

போன்ற புரட்சிகரமான வரிகள் அமைந்துள்ளது.

P.G.முத்தையா ஒளிப்பதிவு செய்து இயக்கி வரும் இந்த படத்தை V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் தயாரித்து வருகிறது. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் மீனாட்சி, வேலராமமூர்த்தி, பாலசரவணன், மிமிகோபி, ஜி.மாரிமுத்து, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். 
 

More News

எனக்கு பிடித்த பெண்ணிற்கு பிறந்தநாள்: விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இன்று ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகே பிறந்த நாள் வாழ்த்து கூறி வரும் நிலையில் அவரது அன்புக்குரியவரான விக்னேஷ் சிவன் வாழ்த்துக்களை கூறாமல் இருப்பாரா?

சசிகலா கணவர் நடராஜன் சரண் அடைவது எப்போது?

சொகுசு காரை இறக்குமதி செய்த சசிகலாவின் கணவர் நடராஜன் அதன்மூலம் ரூ.1.84 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு 2வருட சிறைத்தண்டனையை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

மூன்று தலைமுறை நாயகர்களுடன் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ் திரையுலகில் கடந்த 12 ஆண்டுகளாக நாயகியாக ஜொலித்து வரும் நட்சத்திரமாக திகழும் நயன்தாராவுக்கு பல சிறப்புகள் உண்டு.

ஜெயலலிதாவின் கர்ச்சிப்புக்கு கூட நான் தான் உரிமையாளர்: தீபா

கடந்த 9ஆம் தேதி முதல் சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததன் தொடர்ச்சியாக நேற்று ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடந்தது

போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை: தலைவர்கள் கருத்து

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்றிரவு சோதனை நடத்தியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.