எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவில் துவங்குங்கள்....! பிரதமருக்கு முதல்வர் கடிதம்.....!

மதுரை மாவட்டத்தில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவாக துவங்க வேண்டும், என்று பாரத பிரதமருக்கு மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 27-1-2019 அன்று பிரதமர் மோடி அவர்களால், மதுரை தோப்பூரில் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக குழுவாக தலைவர் மற்றும் செயல் இயக்குனர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலமானது ஒன்றிய அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவங்குவதற்கான வேலைகள் இன்னும் எதுவும் துவங்கப்படவில்லை. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, பணிகளை விரைவில் துவங்க, நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு வேலையை துவங்க முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர், மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதேபோல் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, கடந்த 2020-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான கட்டட பணிகளும் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இந்த செய்தியானது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மதுரையில் கடந்த 2019-இல் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், பணிகள் இன்னும் துவங்கவில்லை. நடைபெற்ற முடிந்த சட்டமன்றத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது, உதயநிதி செங்கல்லை காட்டி பிரச்சாரம் செய்தது மிகவும் பிரபலமானது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட கட்சியினர் உதயநிதி மீது செங்கல் திருடியதாக காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தனர். கட்சியினரின் இச்செயலும் சிரிப்பிற்குரிய வகையில் சர்ச்சையானது.

முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட #AIIMS மருத்துவமனைக்கான பணிகளை முடித்து, முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக் கோரி @PMOIndia அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

எய்ம்ஸ் அமைத்திட ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு நல்கும்! என்று குறிப்பிட்டுள்ளார்.

 

More News

ஓமனக்குட்டி கெட்டப்பில் பிக்பாஸ் ஷிவானி: வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் என்பதும் அவர் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்தார் என்பதும் தெரிந்ததே.

சின்ன வயதில் நடிகர் மனோபாலா எப்படி இருக்கின்றார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

தமிழ் திரை உலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் போன்ற அவதாரங்களில் ஜொலித்து வரும் மனோபாலாவின் இளமைக்கால புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பிரபல சீரியல் நடிகர் கைது!

17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகப் பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகர் பேர்ல் வி புரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பிக்பாஸ் அபிராமியின் த்ரோபேக் கிளாமர் புகைப்படங்கள்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி வெங்கடாச்சலம் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் முதலில் கவினை காதலித்து அதன்பின் டைட்டில் வின்னர் முகினை

ஒருதலைக்காதல்...! கொலையுண்ட இளைஞர் மற்றும் இளம்பெண்...!

காதலிக்க  மறுத்த இளம்பெண்ணை, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகொலை செய்துள்ளார்.