close
Choose your channels

ஆபத்தான நிலையில் மதுரை கொரோனா நோயாளி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Tuesday, March 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருந்த நிலையில் நேற்று மேலும் மூவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்

சென்னை புரசைவாக்கத்தில் சேர்ந்த ஒரு இளைஞரும் திருப்பூரைச் சேர்ந்த ஒருவரும் லண்டனில் இருந்து திரும்பி வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டிருந்தது

அதேபோல் மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இவர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் எந்த வித தொடர்பும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு ஏற்கனவே பல்வேறு நோய்கள் இருந்ததால் இவர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.