செங்கல்பட்டு பிரச்சனை: மதுரை விநியோகிஸ்தர் சங்கத்தின் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Thursday,April 21 2016]

கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் கூடி, செங்கல்பட்டு ஏரியாவில் 'தெறி' படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு இனிமேல் எந்த திரைப்படமும் வழங்கப்படுவதில்லை என அதிரடியாக முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு காரணமாக செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்பட தமிழகத்தின் அனைத்து நகர திரையரங்க உரிமையாளர் சங்கங்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் சங்கங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று மதுரை நகர விநியோகிஸ்தர்கள் சங்கத்தின் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் வெளியான அறிக்கை ஒன்றின் முழுவிபரம் பின்வருமாறு:
திரை உலகை காத்திட, திரையரங்கம் செழித்திட நாம் அனைவரும் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் ஒரு கூட்டு குடும்பமாக இருக்கவேண்டும். ஆகவே இப்போது நடைபெறும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சனையில் மதுரை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் நடுநிலை வகிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
யாருக்கும் யாரும் தடைபோடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. வியாபார சுதந்திரம் தொழிலுக்கு மிக அவசியம். யாருக்கும் யாரும் தடையாக இருக்க கூடாது. எனவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சனையில் நாங்கள் (மதுரை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்) நடுநிலை வகிப்போம்.

More News

'தெறி'யின் ஒருவார வசூல் எவ்வளவு தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகி இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது....

அஜித் கருத்துக்கு ராதிகா ஆதரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்ட மக்களிடம் ஏன் பணம் வசூல் செய்ய வேண்டும் என்ற அஜித்தின் கருத்தை தான் வரவேற்பதாக நடிகை ராதிகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்....

தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனாலும், செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் ஒருசில பிரச்சனைகள் காரணமாக திரையிடப்படவில்லை....

கவுதம் மேனனின் இரண்டு படங்களிலும் ஒரே இசையமைப்பாளர்

செல்வராகவன் இயக்கி வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தில் இசையமைப்பதாக இருந்த சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக யுவன்ஷங்கர்...

நட்சத்திர கிரிக்கெட்: அஜித் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று முடிந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி ரசிகர்களை கவர்ந்ததோ...