பேச்சுரிமை என்றாலும் அதற்கும் வரம்பில்லையா? ரஞ்சித்துக்கு நீதிபதி கேள்வி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ரஞ்சித், 'ராஜராஜ சோழன்' குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து அவர் மீது இரண்டு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணை நடந்து வரும் நிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று ரஞ்சித் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா' என பா.ரஞ்சித்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பாரதிதாசன் கேள்வி எழுப்பினார். மேலும் ராஜராஜ சோழன் பட்டியல் இன மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என எந்த நோக்கத்தில் ரஞ்சித் பேசினார் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. பா.ரஞ்சித் மீதான ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.

ஏற்கனவே ரஞ்சித்தை கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் அவர் எந்த நேரமும் இந்த வழக்கிற்காக கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
 

More News

கைதட்டியது தவறா? முதல்நாளில் மோதிக்கொண்ட சேரன் - பாத்திமா பாபு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பிரச்சனையின்றி, கருத்துவேறுபாடின்றி செல்லும் வரை சுவாரஸ்யம் இருக்காது. எப்போது மோதல் தொடங்குகிறதோ

இந்த முறை பிக்பாஸ் ஈழத்தமிழர்களுக்காகவா?

பிக்பாஸ் 1 நிகழ்ச்சி மக்களை கவர்ந்த அளவுக்கு பிக்பாஸ் 2 மக்களை திருப்திபடுத்தவில்லை என்று கூறப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பாசிட்டிவ் எனர்ஜியை தந்த ஓவியா

யானை சிலைக்கு அடியில் மாட்டிக்கொண்ட பெண்: வைரல் வீடியோ

கேமிரா செல்போன் அறிமுகமான நாளில் இருந்து செல்பி என்ற வியாதி பலரிடம் தொற்றிக்கொண்டது. விளையாட்டாக எடுக்கும் செல்பிகள் சிலசமயம் விபரீதமாக

முதல் நாளிலே ஆட்டம், பாட்டம், முத்தம், ரத்தம் ரணகளத்துடன் தொடங்கும் பிக்பாஸ்

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஒரு வாரம் கழித்தே சூடு பிடிக்கும். ஆரம்பத்தில் நண்பர்களாக இருக்கும் போட்டியாளர்கள் ஒருவாரம் கழித்தே குரூப்பாக பிரிவது,

முதல் நாளிலேயே ஆரம்பிக்கப்பட்ட ஆர்மி! யாருக்கு தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.