close
Choose your channels

பேச்சுரிமை என்றாலும் அதற்கும் வரம்பில்லையா? ரஞ்சித்துக்கு நீதிபதி கேள்வி

Monday, June 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ரஞ்சித், 'ராஜராஜ சோழன்' குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து அவர் மீது இரண்டு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணை நடந்து வரும் நிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று ரஞ்சித் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா' என பா.ரஞ்சித்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பாரதிதாசன் கேள்வி எழுப்பினார். மேலும் ராஜராஜ சோழன் பட்டியல் இன மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என எந்த நோக்கத்தில் ரஞ்சித் பேசினார் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. பா.ரஞ்சித் மீதான ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.

ஏற்கனவே ரஞ்சித்தை கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் அவர் எந்த நேரமும் இந்த வழக்கிற்காக கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.