close
Choose your channels

கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு: மதுரை ஐகோர்ட் தீர்ப்பு

Monday, May 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாக அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி கமல் தாக்கல் செய்த மனுவின் விசாரணை சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சற்றுமுன் கமல்ஹாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 15 நாட்களுக்குள் முன் ஜாமீன் பெறவேண்டும். 10,000 ரூபாய் பிணைத்தொகை செலுத்தவேண்டும், இருநபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்கவேண்டும் என வழக்கமான நிபந்தனைகளுடன் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.