புளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் தண்டனை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

  • IndiaGlitz, [Monday,September 04 2017]

புளூவேல் ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்களின் உயிர்கள் நாளுக்கு நாள் பலியாகி கொண்டே வரும் நிலையில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை தானாகவே முன்வந்து கடந்த வெள்ளியன்று வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது, 'தமிழகத்தில் புளூவேல் விளையாட்டு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுவிட்டதாக சிபிசிஐடி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் உயிரைப் பலிவாங்கும் புளூ வேல் கேமை ஷேர் இட் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்தாலே கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தவரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

More News

உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் தனி அதிகாரிகள் மூலமே நிர்வாகம் நடந்து கொண்டிருக்கின்றது...

வெற்றி மேல் வெற்றி கிடைக்க வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்

முன்றே படங்கள் மட்டுமே இயக்கி, அதில் ஒன்றில் தேசிய விருது பெற்று, முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவர் வெற்றிமாறன் மட்டுமே...

பிக்பாஸ்: நாடகக்காரி விருதை நாடகக்காரியிடம் இருந்து பெற்ற சுஜா

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70வது நாளை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு விருது வழங்கும் நடைபெறுவதாக இன்றைய புரமோ வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல மறுத்த பிரபல நடிகை

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேறு புதிய போட்டியாளர்கள் கிடைக்காததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களே மீண்டும் மீண்டும் இடம்பெற்று வருகின்றனர்...

ஏழைகள் ஏழைகளாகவே சாகவேண்டுமா? அனிதா மரணம் குறித்து சிவகுமார்

நீட் தேர்வு காரணமாக தனது இன்னுயிரை நீத்து கொண்ட அனிதா குறித்தும், இன்றைய கல்விமுறை, நீட் தேர்வால் பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள் குறித்தும் நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...