close
Choose your channels

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட அழகர்! வைரலாகும் வீடியோ

Thursday, April 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாலையில் ஆம்புலன்ஸ் வந்தால் மனிதர்களே சிலசமயம் வழிவிடுவதில்லை. ஆனால் மதுரை கள்ளழகர் ஆம்புலன்சுக்கு வழிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது

மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு கள்ளழகர் ஆற்றில் இறங்குவதுதான். அழகர்கோவிலில் இருந்து கிளம்பும் கள்ளழகர் சாலை வழியாக வைகை ஆற்றுக்கு வந்திறங்கி மீண்டும் சாலை வழியாக அழகர்கோவில் திரும்பும் வரை மதுரையே பக்திக்கடலில் மூழ்கியிருக்கும்

இந்த நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிவிட்டு மீண்டும் அழகர்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ கள்ளழகர் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. உடனடியாக கள்ளழகர் ஆம்புலன்சுக்கு வழிவிடும் வகையில் ஒதுங்கி நின்றார். அங்கிருந்த பக்தர்களும் காவல்துறையினர்களும் ஆம்புலன்ஸ் செல்ல உதவி செய்தனர். ஆம்புலன்ஸ் சென்ற பின்னர் கள்ளழகர் மீண்டும் தனது பாதையில் செல்ல தொடங்கினார்.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆம்புலன்சுக்கு அழகரே வழிவிட்டுள்ளது போல் மக்களாகிய நாமும் ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும் என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.