close
Choose your channels

ஒரே நேரத்தில் 6 வயது சிறுமி, 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: ஊரடங்கு வறுமையிலும் இளைஞரின் காமப்பார்வை

Thursday, July 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வறுமையில் இருக்கும் இளைஞர் ஒருவர் இந்த வறுமையிலும் எதிர் வீட்டில் உள்ள ஆறு வயது சிறுமி மற்றும் எட்டு வயது சிறுவனுக்கு ஒரே நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே வில்லாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் அவர் தெருத்தெருவாக டீ விற்பனை செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் அவரது குடும்பம் வாழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வறுமையிலும் அவர் எதிர் வீட்டில் இருந்த 6 வயது சிறுமி மற்றும் 8 வயது சிறுவன் மீது காம பார்வை வீசியுள்ளார். இந்த குழந்தைகள் அடிக்கடி இவர் வீட்டிற்கு வந்து விளையாடுவதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஒரே நேரத்தில் இருவரையும் மாறி மாறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்து அழுதபடியே பெற்றோர்களிடம் சொல்ல, அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தற்போது பாலசுப்ரமணியன் என்ற இளைஞரை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கொரோனா வைரஸ் காரணமாக வறுமையில் இருந்த நிலையிலும் சிறுவர் சிறுமி மீது காம பார்வை வீசிய இளைஞரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.