close
Choose your channels

கள்ளக்காதலி கொடுமையால் குழந்தைகளுடன் தற்கொலை: 45 வயது நபரின் அதிர்ச்சி செயல்

Tuesday, March 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனைவி இறந்து ஆறு மாதமே ஆன ஒருவர் கள்ளக்காதல் வைத்திருந்த நிலையில் அந்த கள்ள காதலியால் தனது குழந்தைகளுக்கு கொடுமை நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து அவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 42 வயது சுந்தர் என்பவரின் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த சுந்தருக்கு, திருமணமாகி குழந்தை இருந்த லட்சுமி என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் லட்சுமி அடிக்கடி சுந்தர் வீட்டிற்கு வந்த நிலையில் அவருடைய இரண்டு குழந்தைகளையும் கொடுமை படுத்தியதாக தெரிகிறது. இதனால் லட்சுமி மற்றும் சுந்தர் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுந்தர் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளார். முதலில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன்னர் அவர் பதிவு செய்த வீடியோவில் சுந்தர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அவருடைய இளைய மகன் தன்னை கொடுமை செய்த லட்சுமியை ஆவியாக வந்து பழி வாங்குவேன் என்று கூறியிருப்பது காண்போரை கலங்கச் செய்யும் வகையில் உள்ளது

இந்த நிலையில் இந்த தற்கொலைகள் குறித்த தகவல் அறிந்த போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். சுந்தரின் செல்போனில் இருந்த வீடியோ ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் லட்சுமி என்ற பெண்ணிடமும் போலீசார் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos