மதுரை முத்துவின் சிறப்பு பட்டிமன்றம்: IndiaGlitz பொங்கல் ஸ்பெஷல்

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

மற்ற மொழிகளுக்கு இல்லாத பல பெருமைகள் தமிழுக்கு உள்ளது என்பது தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தமிழில் மட்டுமே நடந்து வரும் பெருமைக்குரியதாக கருதப்படுவது பட்டிமன்றம் என்பதும் அந்த பட்டிமன்றம் ஒவ்வொரு திருவிழா நாட்களிலும் தொலைக் காட்சிகளிலும் சரி, மேடைகளிலும் சரி அனைவரும் ரசித்து கேட்கும் வகையில் ஒலிக்கும் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் உலக புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரான மதுரை முத்துவின் சிறப்பு பட்டிமன்றம் ஒன்றை IndiaGlitz பொங்கல் ஸ்பெஷலாக தனது வாசகர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது

‘மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிப்பது புதுமையே’ என்று ஒரு அணியும் ‘மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிப்பது பழமையே’ என்று ஒரு அணியும் பேச வந்திருந்த நிலையில் மதுரை முத்து நடுவராக இருந்து இந்த பட்டிமன்றத்தை சிறப்பித்து உள்ளார்

கலக்க போகுது யாரு’ உள்பட பல நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் பெற்ற ஆதவன் மற்றும் அன்னபாரதி ஆகிய இருவரும் ’மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிப்பது புதுமையே’ என்ற தலைப்பில் பேசினார்கள். அதேபோல் தொலைக்காட்சி நடிகை மற்றும் வழக்கறிஞரான சந்தியாவும் லலிதா என்பவரும் ’மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிப்பது பழமையே’ என்ற தலைப்பில் பேசினார்கள்

இரண்டு தரப்பினரும் மிகவும் திறமையான பேசிய பின்னர் நடுவர் மதுரை முத்து தனது நகைச்சுவை பாணியில் இறுதி உரையை பேசி இந்த தலைப்பிற்கான சரியான தீர்ப்பை அளித்து பட்டிமன்றத்தை நிறைய செய்து வைத்தார். இந்த பட்டிமன்றத்தின் முழு வீடியோவை கீழே உள்ள லிங்க் மூலம் பார்க்கலாம்