தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே! அரசியல் போஸ்டர் அதிரடியில் இறங்கிய சூர்யா ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Saturday,September 05 2020]

கடந்த பல ஆண்டுகளாகவே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் போஸ்டரிலும் மோதிக்கொள்வது தெரிந்ததே. குறிப்பாக விஜய் ரசிகர்கள் விஜய்யை அடுத்த முதல்வராகவே சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

இந்த நிலையில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களை தொடர்ந்து தற்போது சூர்யா ரசிகர்களும் அதிரடி அரசியல் போஸ்டர் களத்தில் இறங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போஸ்டர் மூலம் பரபரப்பை ஏற்படுத்தும் மதுரை நகரில், சூர்யாவை புரட்சியாளர் சேகுராவை போல் சித்தரித்த சூர்யா ரசிகர்கள், ‘திரையுலகை ஆண்டது போதும் தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே’ என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரில் தமிழக சட்டமன்றத்தின் படமும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சூர்யா தனது சொந்த பணத்தில் பலகோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்கள் செய்து பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவரை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

More News

தமிழகப் பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பிரதமர் மோடி எழுப்பிய முக்கிய கேள்வி?

தமிழகத்தைச் சார்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

மாதிரி சவப்பெட்டியில் அடைத்து தண்டனை… இத்தனை கொடூரம் எதற்கு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்றவை மட்டுமே இதுவரை தீர்வாகக் கருதப்பட்டு வருகிறது.

பப்ஜி கேமுக்கு பதில் புதிய கேம்: தொடங்குகிறார் 'ரஜினி-ஷங்கர்' பட நடிகர்!

இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் மாதம் லடாக் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே.

நவம்பரில் ரஜினிகாந்த்? ராகவா லாரன்ஸ் சொல்ல வருவது என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் நவம்பரில் அரசியல் கட்சியை தொடங்குவார் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்ததை ஏற்கனவே பார்த்தோம்.

வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்: ஆசிட் வீசி பழிதீர்த்த இளம்பெண்

மூன்று ஆண்டுகளாக காதலித்த காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இளம்பெண் தனது காதலர் மீது ஆசிட் வீசிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது