close
Choose your channels

5 பைசாவுக்கு 1 கிலோ சிக்கன்… உசிலம்பட்டியில் அலைமோதிய கூட்டம்!!!

Monday, November 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

5 பைசாவுக்கு 1 கிலோ சிக்கன்… உசிலம்பட்டியில் அலைமோதிய கூட்டம்!!!

 

கார்த்திகை நாளான நேற்று ஒரு சிக்கன் இறைச்சி விற்பனை நிறுவனம் தனது கிளையை உசிலம்பட்டியில் துவங்கி இருக்கிறது. தன்னுடைய கிளை நிறுவனத்தை பிரபலப்படுத்த வேண்டும் என நினைத்த அந்த நிறுவன அதிகாரிகள் ஒரு வித்தியாசமான ஆஃபர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். அதாவது 5 காசு நாணயத்தை கொண்டு வந்தால் ஒரு கிலோ சிக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

50 காசு நாணயமே செல்லாது என நினைத்து பலரும் தூக்கி எறிந்து கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் யார் 5 பைசா நாணயத்தை வைத்திருக்கப் போகிறார்கள் என நினைத்து அந்த நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் 5 பைசா நாணயத்தை வைத்துக் கொண்டு நேற்று உசிலம்பட்டி பகுதியில் நூற்றுக் கணக்கான மக்கள் சிக்கன் வாங்குவதற்காக குவிந்து உள்ளனர்.

இந்தக் காட்சியைப் பார்த்த அந்நிறுவன அதிகாரிகளே மலைத்து போயுள்ளனர். இந்நிலையில் 5 பைசா நாணயத்தைக் கொடுத்து சிக்கன் வாங்கிச் சென்ற பல வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாகக் கூறப்படுகிறது. இதனால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாகவும் அதை போலீசார் சரிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.