close
Choose your channels

இன்ஸ்டாகிராமில் பழகி 11ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!

Friday, December 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்ஸ்டாகிராமில் பழகி பதினோராம் வகுப்பு மாணவி ஒருவரை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி ஒருவர் நாமக்கல்லில் விடுதியில் தங்கி படித்து வந்தார். அவருக்கு சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் மதுரையை சேர்ந்த அபுல்ஹசன் என்பவருடன் அவர் நட்பாக பழகி உள்ளார். இருவரும் வீடியோ சாட்டிங் செய்துள்ளதாகவும், அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் அந்த மாணவியின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி மிரட்டிய அல் ஹசன் தன்னுடன் உறவு கொள்ளுமாறும், இல்லாவிட்டால் ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனை அடுத்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்ததால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் அபுல்ஹசனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவரை இன்ஸ்டாகிராமில் பழகி ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டியதோடு அவரை கற்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.