'தி லெஜண்ட்' படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்!

பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தமிழகத்தில் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வெளியிட இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 

அதேபோல் API என்ற நிறுவனம் உலக நாடுகளில் இந்த படத்தை பிரமாண்டமாக வெளியிட உரிமை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’தி லெஜண்ட்’ படத்தின் கேரள மாநில ரிலீஸ் உரிமையை கேரளாவின் முன்னணி நிறுவனமான மேஜிக் பிரேம்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் போலவே கேரளாவிலும் பெருவாரியான திரை அரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

'உறியடி' விஜயகுமாரின் அடுத்த படம்: இயக்குனர் இவர் தான்!

உறியடி விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.  இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார். 

இனி பயணம் செய்து கொண்டே புதுப்படம் பார்க்கலாம்: வெறும் ரூ.30 தான்!

 திரையரங்குகளில் சென்று மட்டுமே படம் பார்க்க முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்த நிலையில் தற்போது வீட்டில் இருந்துகொண்டே ஓடிடி மூலம் புதிய திரைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

நெஞ்சுல கை வச்சா உடனே ஹார்ட் அட்டாக்கா? 'கோப்ரா' இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு!

நடிகர் சியான் விக்ரம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லேசான நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

நயன் - விக்கியை சந்தித்த பிரபல பாலிவுட் நடிகை: வைரல் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் திருமணம் செய்தார் என்பதும் அதன் பின்னர் தாய்லாந்து நாட்டிற்கு இருவரும் தேனிலவு சென்று வந்தனர் என்பதும் தெரிந்ததே.

ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் கனவுப்படம்: ஹீரோக்கள் இவர்களா?

தமிழ் திரை உலகில் முதல் முதலில் பிரமாண்டத்தை கொண்டு வந்தது இயக்குனர் ஷங்கர்தான் என்பதும் அவருடைய ஒவ்வொரு படமும் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும்