மகாராஷ்டிராவில் கனமழையால் நிலச்சரிவு.....! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.....!

  • IndiaGlitz, [Friday,July 23 2021]

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில், இதுவரை 36 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள தலியே மற்றும் சுடர்வதி கிராமங்களில் இதுவரை 36 நபர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 4 நாட்களாக அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ரைகாட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் உள்ளிட்ட கரையோர மாவட்டங்களில், சென்ற 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், பல கிராமங்களும், சிறிய நகரங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக வஷிஸ்தி, ஜக்புடி மற்றும் கஜலி போன்ற நதிகளால் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகங்களில் பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே கூறியிருப்பதாவது, ரைகாட் மாவட்டத்தில் இதுவரை 36 நபர்கள் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவில் பலர் மாட்டியிருக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் மீட்புப் பணிகளிலும் முடக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி முகமை, 'தலியே கிராமத்தில் 32 நபர்களும், சுடர்வதி கிராமத்தில் 4 நபர்களும் இறந்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கனமழை பெய்யும் மாவட்டங்களிலும், நீர் அதிகமுள்ள இடங்களிலும், வீடுகளில் சிக்கியுள்ளவர்களையும் மீட்க பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையும் உதவி செய்வதாக கூறியுள்ளது. சாலைகள் சேதமடைந்துள்ளதால், செல்போன் டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் எத்தனை நபர்கள் உயிரிழந்தார்கள் என்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 

More News

'சூர்யா 39' படத்தின் சூப்பர் டைட்டில் மற்றும் அட்டகாசமான போஸ்டர்!

சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி மேல் இன்ப அதிர்ச்சியாக அவரது படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு வருகின்றன

உயிருக்குப் போராடும் கணவர்… விந்தணுக்களை கேட்டு மனைவி நடத்திய பாசப்போராட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் கணவரின் விந்தணுக்களை சேகரித்து அதன் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருக்கிறது

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு செய்றீங்களா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையுயர்வை அடுத்து மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.

ஜீன்ஸ் அணிவது ஒரு குற்றமா? 17வயது சிறுமியை அடித்தே கொன்ற கொடூரத் தாத்தா!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 17 வயது சிறுமியை ஜீன்ஸ் அணிந்த குற்றத்திற்காக குடும்ப உறுப்பினர்களே

விஜயபாஸ்கரிடம் சிக்கிய ஆவணங்கள்...! வங்கி லாக்கரில் சோதனை செய்ய திட்டம்....!

விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.