close
Choose your channels

1000 சிறை கைதிகளுக்கு கொரோனா… அதிகாரிகளையும் விட்டு வைக்கவில்லை… திடுக்கிட வைக்கும் தகவல்!!!

Friday, August 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

1000 சிறை கைதிகளுக்கு கொரோனா… அதிகாரிகளையும் விட்டு வைக்கவில்லை… திடுக்கிட வைக்கும் தகவல்!!!

 

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து நெருக்கடி நிலையைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் சிறை கைதிகளுக்கும் கொரோனா பரவும் விகிதம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை 1000 சிறை கைதிகளுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அம்மாநில சிறை நிர்வாகம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

சிறைக் கைதிகளைத் தவிர சிறைகளில் வேலைப் பார்க்கும் அதிகாரிகளுக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 292 சிறை அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதைப் போலவே உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயருவதால் கடுமையான அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.

இதுவரை அம்மாநிலத்தில் 18 ஆயிரத்து 650 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருப்பதாக இந்தியச் சுகாதாரத்துறை அறிவிப்பில் தெரிய வருகிறது. இந்திய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தமிழகத்தில் இதுவரை 5,278 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். டெல்லி-4,153, கர்நாடகா-3,510, உத்திரபிரதேசம்- 2,230, மேற்கு வங்கம்- 2,203, ஆந்திரா-2,296, மத்தியப் பிரதேசம்-1,048, குஜராத்-2,713 என அடுத்தடுத்த நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.