close
Choose your channels

ஒயின் மது அல்ல… மளிகை கடையில் விற்கும் அரசு!

Friday, January 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒயின் மதுவகைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டு விற்பனை செய்யப்படும் நிலையில் மகாராஷ்டிரா அரசு ஒயினை சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளில் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சட்டம் விவசாயிகளின் நலன் சார்ந்து அமையும் என்றும் அம்மாநில அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

நீண்டகாலமாக ஒயின் மது வகைகளுள் ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில் அதிகமாக விற்பனையாகி வரும் ஒயினை மதுவகையில் இருந்து விலக்கும் நடைமுறைக்கு நேற்று மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பழ உற்பத்தி சார்ந்த விஷயங்களில் அதிக லாபம் ஈட்டமுடியும். மேலும் விவசாயிகளின் பொருளாதாரத்திற்கு இது உதவியாக இருக்கும் என்றும் அம்மாநில அமைச்சர் சஞ்சய் ராவத் விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்தப் புதிய உத்தரவையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 1000 சதுர அடிக்கொண்ட கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வைத்து இனி ஒயினை விற்பனை செய்ய முடியும். மேலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் விற்பனைக்கு தடை மற்றும் மதுவிலக்கு அமலில் உள்ள மாவட்டங்களில் விற்பனை செய்யக்கூடாது எனவும் கூறப்பட்டு இருக்கிறது.

விவசாயிகளின் நலன்சார்ந்து சிவசேனா அரசு எடுத்திருக்கும் இந்தப் புதிய முயற்சிக்கு அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.